8.3.10

பழமொழிகளும் பொன்மொழிகளும் ..... 8-03-2010 காய்கறிகளின் விலைகள்

Vegetable Prices at Chennai Koyambedu Market 8/3/2010


ஒரு சாதாரண சில்லரை காய்கறி வியாபாரி கோயம்பேடில் ( Chennai Koyambedu Market ) என்ன விலைக்கு காய்கறிகள் வாங்குகிறார் என்று விசாரிக்கப்பட்டு அந்த விலை விபரங்கள் இங்கு தரப்படுகின்றன். காய்கறிகளின் தரத்துக்கேற்பவும் உங்கள் பகுதிக்கு கொண்டுவரும் டிரான்ஸ்போர்ட் செலவுக்கேற்பவும் காய்கறிகளின் சேதாரமாகும் தன்மையைபொருத்தும் ஒவ்வொரு ஏரியாவைப் பொருத்தும் விற்பனை விலை மாறுபடும்.

காய்கறிகளும் அதன் இன்றைய விலைகளும் Vegetable Prices at Chennai Koyambedu Market
காய்களின் பெயர் விலை காய்களின் பெயர் விலை
பெரிய வெங்காயம் 1கி 11 ரூ சாம்பார் வெங்காயம் பெரிசு 1கி 15

ரூ
நாட்டு தக்காளி பெட்டி60ரூ பெங்களுர் தக்காளி பெட்டி100ரூ
கேரட் 1கி 13ரூ பீட்ருட் 1கி 10ரூ
இஞ்சி 1கி 40ரூ பச்சை மிளகாய் 1கி 15ரூ
நல்ல உருளை கிழங்கு 1கி 10ரூ தேங்காய் சிறிசு 5ரூ
தேங்காய் மீடியம் 7ரூ சேனை 1கி 20ரூ
உஜாலா கத்தரி 1கி10ரூ முருங்கை 1கி 30ரூ
பாவக்காய் 1கி 12ரூவெண்டை 1கி 12ரூ
அவரை 1கி 12ரூ பீன்ஸ் 1கி 25ரூ
கோஸ் 1கி 5ரூ வெள்ளரி 1கி 7ரூ
புடலை 1கி 10ரூ கொத்த மல்லி 1கட்டு 2ரூ
chennai koyambedu market



பழமொழிகள் என்பது ஒரு சமுதாயத்திலே நீண்ட காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் அனுபவ குறிப்புகளாகும்.
1.  உலகத்திற்கே தெரியவேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் மட்டும் சொல் அது போதும்

2. ஓநாய்கள் வாழும் இடத்தில் பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

3. சாமியே சைக்கிள்ள போக பூசாரி புல்லட் கேட்டானாம்

4. செவிடன் இருமுறை சிரிப்பான்

5.  ஆண் தாட்சண்யப்பட்டால் கடன் , பெண் தாட்சண்யப்பட்டால் விபச்சாரம்

6. சோத்துல கெடக்குற கல்லை எடுக்காதவன்
சேத்திலே கெடக்குற எருமையத் தூக்குவானா ?

7.  காகம் உனக்கு வழிகாட்டினால் அது செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்

8.  அடித்து வளர்க்காத பிள்ளையும் முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன் ஏய்க்கும்

9.  அஷ்டமத்துச் சனி அழுதாலும் விடாது

10. கூரை ஏறிக் கோழி பிடிக்கமுடியாத குருக்கள்
வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுவாரா

11. அவிசாரி ஆனாலும் முகராசி வேணும் , அங்காடி போனாலும் கைராசி வேணும்

12. ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால் நீ அதன் காம்பைப் பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்

13. பொண்டாட்டி என்றால் புடவை துணிமணிகள் என்று அர்த்தம்


14 மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் , சாத்தானிடம்
செல்லத் துள்ளி ஓடுகிறான்

15. அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது

16. புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்
அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்

17. மனைவிக்குச் சீலைகள் வாங்கிக் கொடுத்தால் , கணவனுக்கு அமைதி கிடைக்கும்

18. அதிகாரி குசுவிட்டால் அமிர்த வஸ்து
தலையாரி குசுவிட்டால் தலையை வெட்டு

19. ஆடிக்காற்றில் அம்மியும் குழவியும் ஆலாய்ப் பறக்கும் போது
இலவப்பஞ்சு ஏன் என்று சேதி கேட்டதாம்

20. அஞ்சும் சரியாக இருந்தால் அறியாப் பெண்ணும் கறி சமைப்பாள்

21. அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை , ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும் எஜமானனை கீழே தள்ளாமல் விடாது

22. அக்காள் ஆனாலும் சக்களத்தி சக்களத்தி தான்

23. அறுப்புக்காலத்தில் எலிக்கு ஏழு கூத்தியாள்


24. அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்

25 உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

26. அதிர்ந்து வராத புருஷனும் , மிதந்து வராத அரிசியும் பிரயோசனமில்லாதவை

27. அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்

28. உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் உன் தொப்பியிடமும் யோசனை கேள்

29. அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன் இரவு நேரங்களில் இன்பமாகவும்
பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்

30. படப்போட திங்குற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டா காணுமா ?


31. தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை

32. பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்
ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்

33. குட்டையான பெண்ணை மணந்து கொண்டால் துணி அதிகம் தேவையிராது.

34. சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம் அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம் விவாகம் மோசமானால் ஆயுள் முழுவது நஷ்டம்


35. சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது

36. சல்லடையில் கூட தண்ணீரை எடுத்துச் செல்வான் புத்திசாலி

37. போதகர்களுக்குள் சண்டை வந்துவிட்டால் சைத்தானுக்குக் கொண்டாட்டம்

38. முதல் தவறு இரண்டாவது தவறுக்கு இருக்கையைத் தயார் செய்கிறது

39. எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப்பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது  அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்

40. ஆண்கள் யாருமே இல்லையென்றால் பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்

41. உரலில் தலையைவிட்டபிறகு உலக்கைக்கு அஞ்சக் கூடாது

42. மணவாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,ஆனால் நீ எப்போதும் தனித்திரு

43. சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு
அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு

44. ஆக்கங்கெட்ட அக்கா மஞ்சள் அரைத்தாலும் கரிகரியாக வரும்

45. கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி

46.  மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் அந்த விலையைப் பற்றியும் நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்

47. ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு அதிலும் கெட்டது குருக்களுக்கு

48. இடிவிழுந்தபின் பஞ்சாங்கம் பார்த்துப் பயனென்ன ?

49. இரத்தத்தில் கையை நனைப்பவன் , கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்

50. கூறு கெட்ட மாடு ஏழு கட்டுப் புல் திங்குதாம்


51. வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே தனக்குச் சவக்குழி
தோண்டிக்கொள்கிறான்

52. இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது
தைமாத மழை தவிட்டிற்குக் கூட காணாது


53. உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை

54. எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது

55. கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்


56. ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்

57. ஒரு பெண்ணையும் காதலிக்காதவன் பன்றியிடம் பால் குடித்திருப்பான்

58. ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்


59. பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள் ஓய்வுகொடுத்துத்
தானும் மூன்று நாள் பட்டினியாயிருப்பான்

60. மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி மளிகைக்கடை வைத்ததாம் 

61. குழந்தை ஏன்?” என்று கேட்பதுதான் தத்துவ ஞானத்தின் திறவுகோல்

62. தற்புகழ்ச்சியின் வாடையை யாராலும் தாங்கமுடியாது
பழமொழியில் உமி கிடையாது

63. பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்
அவள் காதல் கொண்ட சமயம்,தலை நரைக்கத் தொடங்கும் சமயம்

64. குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை
மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்

65. பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால்
பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள்
நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்

66. ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை

67. மனைவியும் பாயும் வந்தபுதிதில் சிறப்பாக இருக்கும்

68. ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை

69. உறங்குகின்ற ஓநாயின் வாயில் ஆடுகள் சென்று விழுவதில்லை

70. திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும்
ஒரு விலாங்கும் இருக்கும்

71. நாக்கு தான் பெண்ணிற்கு வாள், அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை

72. உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்

73. நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை
மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்
கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்

74. எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்

75. கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம்  பற்றிய நினைப்பை உண்டாக்குவார்

76. ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்

77. ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன் தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்

78. தாடி பேன்களை உண்டாக்குமேயொழிய அறிவை உண்டாக்காது

79. ஒரு பையிலுள்ள அரிவாள் , பூட்சுக்குள் இருக்கும் துரும்பு, சாளரத்தின் அடியிலுள்ள பெண் இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி அறிவுறுத்திக் கொண்டே இருக்கும்

80. சேற்றிலுள்ள புள்ளும் , வேட்டைநாயின் பல்லும் , மூடனுடைய சொல்லும் அதிகமாய்க் குத்தும்

81. நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
ஜன்னல்கள் வழிகாட்டும்

82. உலோபியிடம் யாசித்தல் கடலில் அகழிவெட்டுவது போன்றதாகும்

83. உள்ளூரிலே ஓணான் பிடிக்காதவன்
உடையார் பாளாயத்துல போயி உடும்பு பிடிப்பானா ?

84. மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்

85. ஜாருக்கு ஜலதோஷம் வந்தால் ரஷ்யா முழுவதும் தும்மும்

86. காபியும் காதலும் சூடாக இருக்கும் வரை தான் ருசியாக இருக்கும்


87. கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்

89. பெண்ணின் யோசனையால் பலனில்லை என்றாலும்
அதை ஏற்றுக் கொள்ளாதவன் பாடு அவலம்தான்

90. அவசரக்காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்

91. பழைய இஞ்சியில் காரம் அதிகம்

92. மனிதரில் நாவிதனும்  பறவைகளில் காகமும் வாயாடிகள்

93. ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்
அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்

94. சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுது கொண்டே தொங்கும்

95. தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,
காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை

96. பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்

97. தூக்கில் தொங்குவதும் மனைவி வாய்ப்பதும் விதியின் பயன்

98. மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்


99. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

100. அடியாத மாடு படியாது

101. அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

102. ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

103. கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

104. விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.?

105. கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

106.. உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

107. ஆத்து நிறைய தண்ணி போனாலும் நாய் நக்கிதான் குடிக்கனும்

108. . வெளுத்ததெல்லாம் பாலல்ல

109. பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

110.  ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

111. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்

112. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

113. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

114. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி

115. வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

116. பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

117. சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்

118. வேலிக்கு ஓணான் சாட்சி.
.
119. நிறைகுடம் ததும்பாது

120. கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.

121. அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.

122. சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
.
123. குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்புல கொப்புல தாவுமாம்.

124. பிச்சை எடுத்தனாம் பெருமாள் அதை பிடிங்கி தின்னானாம் அனுமான்

125. நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போனது போல்.

126. இளகின இரும்பைப் பார்தால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

127. குடிகாரன் பேச்சு விடிஞ்சவுடன் போச்சு.

128. தன் வினை தன்னைச் சுடும்

129. முள்ளை முள்ளால்தானே எடுக்கவேண்டும்.

130. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

131. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

132. முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

133. எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்

134. வைக்கோற் போர் நாய் போல.

135. அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.

136.பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.

137. விரலுக்குத் தகுந்த வீக்கம்.
.
.138. பசி வந்தால் பத்தும் பறக்கும்.

139. ஆழம் தெரியாமல் காலை விடாதே.

140. அடியாத மாடு படியாது.

141. விளையும் பயிரை முளையிலே தெரியும்

142. பனை மரத்தடியில் பால் குடித்தது போல.

.143. ஆடத் தெரியாதவள் மேடை கோணல்னு சொன்னது போல.

144. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடனும்

145. படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.

146. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்

147. கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்

148. யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.

149. உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

150. பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

151. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

152. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது

153. கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.

154. புலி பசித்தாலும் புல்லை தின்னாது.

155. குண்டுச் சட்டியில குதிரை ஓட்டுற மாதிரி.

156. ஆனைக்கும் அடிசறுக்கும்.

157. எறும்பூரக் கல்லும் தேயும்.
.
158. சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.

159. சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.

160. அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.

161. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்

162. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

163. வெண்ணெய் திரண்டு வற்றப்ப  தாழி உடைஞ்சது போல்

164. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
.
165. மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

166. அரை நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

167. கொல்லன் தெருவிலே ஊசி வித்தாற் போல
.
168. ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

169. .ஆடுற மாட்டை ஆடிக் கறக்கனும்  பாடுற மாட்டைப் பாடிக் கறக்கனும்
.
170. நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்

171. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

172. சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

173. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

174. காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
.
175. தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறுதானே

176. தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.

177. இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

178. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

179. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.

180. தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

181. காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

182. கண்ணை வித்தா சித்திரம் வாங்கமுடியும்

183. தடியெடுத்தவன் தண்டக்காரன்.

184.குரைக்கிற நாய் கடிக்காது.

185. ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

186. ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்

187. நக்குற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?

188. பொறுத்தார் பூமியாள்வார் .

189. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

190. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
.
191. தனிமரம் தோப்பாகாது

192. தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.

193. மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

194. தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.

195. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுற மாதிரி.

196. காகம் திட்டி மாடு சாகாது.

197. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

198. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
199. கழுதை அறியுமா கற்பூர வாசனை?
200. கலங்கின குட்டையில்தானே மீன் பிடிக்க முடியும்

No comments: