3.7.10

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனததே - வாழ்க்கை
அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
உடைந்து போன சிலை ஆனதே - நான்
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அடைந்த செல்வம் கொள்ளை போனதே
அமைதியின்றியே அலைய நேர்ந்ததே

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே

எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
துன்ப கீதமே பாடுகின்றாயோ?
இந்த நிலை என்று மாறுமோ?
இந்த நிலை என்று மாறுமோ? உனைக் காணும்
இன்ப நாளுமே வந்து சேருமோ?

நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
நீங்கிடாத துன்பம் பெருகுதே



மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன..

மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன..
அழகர் மலை அழகா…இந்த சிலை அழகா…என்று
மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன..

நவரசமும்ம் …….

முகத்தில் நவரசமும்..
மலர்திருக்கும் முகத்தில் நவரசமும்…
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும்..கண்டு

(மறைந்திருந்து பார்க்கும் …)

எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்…
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்..
பாவை என் பதம் காண நாணமோ….
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா…
தூயனே வேலவா…மாயனே சண்முகா

(மறைந்திருந்து பார்க்கும் …)

நாதத்திலே தலைவன் குரல் கேட்டேன்…
அந்த நாதத்திலே என்னை நான் மறந்தேன்…
மோகத்திலே என்னை மூழ்க வைத்து..(2)
ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல்…
தூயனே வேலவா…மாயனே சண்முகா ,….எனையாளும் சண்முகா வா….

(மறைந்திருந்து பார்க்கும் …)

மான் ஆட மலை யாட..நதியாடா…
மங்கை இவள் நடனமாட….

கண் ஆட..மண் ஆட .ஒளியாட..இடையாட….
செல்வி இவள் கைகள் ஆட….

தூயனே வேலவா…மாயனே சண்முகா ,….எனையாளும் சண்முகா வா….

(மறைந்திருந்து பார்க்கும்…)

பாடல்: மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசீலா


பழம் நீ அப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

திருச் சபை தன்னில் உருவாகிப்
புலவோர்க்குப் பொருள் கூறும்
பழனியப்பா!
ஞானப் பழம் நீ அப்பா!
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!
ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!
திருக் கார்த்திகைப் பெண் பால் உண்டாய்!
உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த
தமிழ் ஞானப் பழம் நீ அப்பா!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு
உற்றார் பெற்றாரும் உண்டு!
நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில்
நீ வாழ இடமும் உண்டு!
தாயுண்டு மனமுண்டு அன்புள்ள
தந்தைக்குத் தாளாத பாசம் உண்டு! உன்
தத்துவம் தவறென்று சொல்லவும் ஒளவையின்
தமிழுக்கு உரிமை உண்டு!!!

ஆறுவது சினம்! கூறுவது தமிழ்!
அறியாத சிறுவனா நீ?
மாறுவது மனம்! சேருவது இனம்!
தெரியாத முருகனா நீ?
ஏறு மயில் ஏறு!
ஈசனிடம் நாடு!
இன்முகம் காட்ட வா நீ!
ஏற்றுக் கொள்வார்!
கூட்டிச் செல்வேன்!
என்னுடன் ஓடி வா நீ!

திரைப்படம்: திருவிளையாடல்
பாடியவர்: திருமதி. கே.பி. சுந்தராம்பாள்
இசையமைப்பாளர்: திரு. கே.வி. மகாதேவன்
இயற்றியவர்: கவியரசர் திரு. கண்ணதாசன்



முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ..... தனதான



முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை

கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே



நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?

திரைப்படம்: இரும்புத் திரை
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: எஸ்.வி. வெங்கடராமன்
பாடியோர்: பி. லீலா, டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1960

ஓஓஓஓ ஓஓ ஆஆஆஆ ஆஆஆஆஆ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ
என்றும் பேசாத தென்றல் இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன?

ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஓர விழிப் பார்வையிலே உள்ளதெல்லாம் சொல்லிவிட்டு
ஒன்றும் தெரியாதது போல் கேட்பதும் ஏனொ?

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
கிளையில் கொடி இணையும் படி ஆனதும் ஏனோ?
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ?

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா?
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
நினைவைப் புரிந்து கொள்ள முடியுமா?

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா?
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா? - என்
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா?

No comments: